இலங்கையின் இரண்டாம் நாகராக்க கால ஆட்சிமையங்கள்
இலங்கையில் சுமார் 1500 வருடகாலம் நிலைத்திருந்த இராசரட்டை யுகம் கலிங்கமாகன் கி.பி 1215 இல் மேற்கொண்ட படையெடுப்பின் பின் வீழ்ச்சியடையத் தொடங்கியது. அதன் பின் இரண்டாம் நகராக்க காலத்தில் தோன்றிய ஆட்சி மையங்கள் முக்கியம் பெறத்தொடங்கின. அவற்றின் அரசர்களும் அவர்களின் பணிகளும் இலங்கை வரலாற்றில் சிறப்புப் பெறுகின்றன.