இந்தியாவின் பஞ்சாயத்து முறை – ஓர் அறிமுகம்
இந்தியாவின் பஞ்சாயத்து முறை – ஓர் அறிமுகம் ஐனநாயகம் என்பது ஓர் ஆட்சி முறை என்ற வகையில் அது வெற்றிகரமாக இயங்குவதற்கு மக்களின் பங்களிப்பு என்பது மிகவும் அவசியமானதாகும் . அந்தவகையில் நவீன அரசுகள் கொண்டுள்ள பாரிய பிரதிநிதித்துவ நிறுவனங்கள் மூலமாக மக்களின் அரசியல் பிரச்சினைகளை வெற்றிகரமாக தீர்க்க முடியாத நிலையில் உள் @ ர் ரீதியாக உள்ள அமைப்புகளுக்கு அதிகாரத்தை வழங்கி அவர்கள் தமது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளத்தக்க வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதனை இன்றைய அனைத்து ஐனநாயக அரசுகளிலும் காணமுடியும் . அந்தவகையில் மக்களால் உருவாக்கப்படுகின்ற அடிமட்ட அமைப்புகளுக்கு அதிகாரத்தை வழங்குவதன் மூலமாக மக்களின் அரசியல் பங்குபற்றுதலை உயர்த்த முடிவதுடன் மக்கள் தாம் எதிர் நோக்கும் பிரச்சினைகளைத் தமது திட்டங்கள் மூலமாகவே நிறைவேற்றிக் கொள்வதுடன் மத்தியிலிருந்து மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் பல்வேறு சுரண்டல்களுக்கு உற்பட்டு இறுதி மட்டத்திற்கு வருவதும் தடைப்படுகிறது . இதனால் அபிவிருத்தியும் துரிதப்படு...