Posts

Showing posts from 2020

மனித உரிமைகள்

Image
மனித உரிமைகள் எனும் விடயமானது இன்றைய நிலையில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றதொரு விடயமாக உள்ளது. பல்வேறு விழுமியங்களில் நம்பிக்கை கொண்டோரும் பல்வேறு சித்தாந்தங்களைக் கடைப்பிடிப்போரும் தமக்கேற்றாற் போல் மனித உரிமை விடயங்களை வடிவமைப்புச் செய்துள்ளனர். அதே வேளை மனித உரிமை என்பது சமூகத்தோடு இணைந்து வளர்ச்சியுற்று இன்றைய நிலையினை அடைந்துள்ளது. இன்றும் மனிதவுரிமைகள் எனும் விடயமானது சமூகத்துடன் இணைந்தே அசைவுற்றுக் கொண்டுள்ளது. இதனால் மனித உரிமை என்பதற்கு திட்டவட்டமான வரைவிலக்கணம் கூறுவது கடினமானதோர் விடயமாகவுள்ளது. இதன் காரணமாக அறிஞர்கள் மனித உரிமைகளுக்கு வேறுபட்ட வரைவிலக்கணத்தினை முன்வைக்கின்றனர். மனித உரிமை எனும் விடயத்தை விளக்க முற்படுகையில் மனிதன், உரிமை எனும் இரு விடயத்தினை விளங்கிக் கொள்வது அவசியமாகும். மனிதன் என்கின்ற பதமானது தேசியம், வாழிடம், பால், தேசம், இனம், நிறம், மதம், மொழி அல்லது இவை போன்ற வேறு நிலைகளைக் கடந்து இப் பூகோளத்தில் வாழும் அனைவரையும் குறிக்கிறது. மனிதர்கள் யாவரும் வேறுபாடு அற்றவர்கள் என்பதே இதன் உட்கிடக்கையாகும். ஆயினும் உரிமைகள் எனும் பதத்தினை இவ்வாறு இலகுவாக வரையறை...

உரிமைகளும் சர்வதேசமும் Rights and International Community

உரிமைகளும் சர்வதேசமும் ஐக்கிய நாடுகள் சபையானது மனித உரிமைகள் பிரகடனத்தில் பல உரிமைகளினை குறிப்பிட்டு வெளியிட்டதனைத் தொடர்ந்து அவற்றை அரசுகள் தம் யாப்புகள் மூலமாக அங்கீகரித்ததுடன் பல்வேறு ஒப்பந்தங்கள் , சாசனங்கள் , பிரகடனங்கள் மூலமாக அவற்றை ஏற்கவூம் செய்தன . இதன் காரணமாக உரிமைகளினை பாதுகாக்கும் பொறுப்பினை தம் மீது சுமத்தியூம் கொண்டன . ஆயினும் உரிமைகளின் நிலையூம் அவற்றினைப் பாதுகாப்பதற்கான தரமும் உலக நாடுகளனைத்திலும் ஒரே மாதிரியானதாக காணப்படவில்லை . இது இவ்வாறாக இருக்க ஒரு அரசு தனது மக்களை நடத்தும் விதம் தொடர்பில் சர்வதேசம் இரண்டாம் உலகயூத்தம் முடிவடையூம் வரையிலும் அதிக கவனம் செலுத்தவில்லை . இரண்டாம் உலகயூத்தத்தின் போதும் அதன் பின்னரும் மனிதாபிமானத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குற்றங்களினை அடுத்து நாடுகளின் நியாயாதிக்கத்தினுள் வாழும் மக்களைப் பாதுகாப்பது தொடர்பில் சர்வதேசத்தின் கவனம் திரும்பியது . இதன் வெளிப்பாடாகவே நாசி குற்றவாளிகள் நியூரம்பேர்க் ( ரேசநசஅடிநசப ) நீதிமன்றத்தின் முன் நிறுத்தப...