Posts

Showing posts from January, 2018

இந்திய சமஸ்டி எதிர்நோக்கும் சவால்கள்.

இந்திய சமஸ்டி எதிர்நோக்கும் சவால்கள்      'நாட்டின் ஒற்றுமை அதிகாரத்தினை  மாநில உரிமைகளோடு இணைக்கும் செயற்பாடே சமஸ்டி" என யூ.ஏ. டைசி குறிப்பிடுகின்றாH. சமஸ்டி என்பது ஆங்கிலத்தில் 'குநனநசயடளைஅ" என்று அழைக்கப்படுகின்றது. இது 'குழநனரள" எனும் இலத்தீன் மொழி சொல்லில் இருந்து தோன்றியது.இதன் பொருள் நட்பு நாடுகளுக்கிடையிலான கூட்டு என்பதாகும். இவ்வாறு நட்பு நாடுகளுக்கிடையிலான கூட்டானது மாநிலங்கள் உடன்பாட்டுடன் இணைந்து செயற்பட முன்வருகின்ற போது உருவாகின்றது. அரசுகள் உடன்பாடு காணப்படுகின்ற விடயங்களில் கூட்டாகவூம் ஏனைய விடயங்களில் சுதந்திரத்துடனும் செயற்பட முன்வருகின்றன. இதனால் மாநில அரசுகளின் தனித்துவம் பேணப்படுவதுடன் மாநிலங்கள் பல ஒன்றிணைவதன் மூலமாக பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படுகின்றது. இதனடிப்படையில் 'மத்திய அரசு ஒன்றின் தலைமையின் கீழ் மாநில அரசுகள் தம் சுதந்திரம் தனித்துவம் என்பவற்றை இழக்காமல் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொண்டு பொது நன்மையின் அடிப்படையில் ஒரு யாப்பின் கீழ் ஒன்றிணைக்கப்படுவதே சமஸ்டி" என வரையறை செய்யலாம்.      பல தனிப்பட்ட அரசுகள் ஒ...

இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சியின் வகிபாகம்.

இந்திய அரசியலில்  காங்கிரஸ் கட்சியின் வகிபாகம். அரசியல் கட்சிகள் என்ற பதம் 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏற்பட்ட பிரதிநிதித்துவ ஒழுங்கமைப்புடனும் வாக்குரிமை விஸ்தரிக்கப்பட்டதிலிருந்தும் தோற்றம் பெற்றது pயசவவைசைந என்ற பிரெஞ்; மொழியிலிருந்து தோன்றிய ஒன்றாக கட்சி என்புத காணப்பட்டது. இது பிரித்தல் என்ற பதத்தை குறித்து நிற்கின்றது அதேசமயம்  pயசவழபநச என்ற லத்தீன் பதத்துடன் தொடர்புபட்டு கட்சி என்று பங்குகொள்ளல் என்ற பொருளை தருகின்றது ஸ்ரீவன் யூ+கொக் கட்சி பற்றி குறிப்பிடுகையில் “ ஓர் இணைபத அரசியல் சமூகமாக செயற்படுவதும் ஒரளவூக்கு நெறிப்படுத்தப்பட்டதுமான ஓர் அமைப்பு என்றும் அது குடி மக்களால் உருவாக்கப்படுமேயானால் அதுவே அரசியல் கட்சி என்று குறிப்பிடுகின்றார். இந்தியாவின் அரசியல் கட்சிகள் இந்திய சுய ஆதிக்கம் உள்ளப் பெரிய ஜனநாயக நாடாகவூம் காணப்படுவதோடு அது ஒரு தல அரசியல் கட்சியூடன் பல்வகைப்பட்டது அதனால் தன்னலம் மிக்க சிறு அரசியரல் கட்சிகளும் கூடிய ஒரு சமஸ்டி முறை கொணட நாடாககும் இதனால் இந்தியாவினுடைய அரசியல் கட்சி பற்றி பார்க்கும் போது அவற்றின் தோற்றம் வளர்ச்சி என்பன...

உரிமைகளும் சர்வதேசமும்

உரிமைகளும் சர்வதேசமும் ஐக்கிய நாடுகள் சபையானது மனித உரிமைகள் பிரகடனத்தில் பல உரிமைகளினை குறிப்பிட்டு வெளியிட்டதனைத் தொடர்ந்து அவற்றை அரசுகள் தம் யாப்புகள் மூலமாக அங்கீகரித்ததுடன் பல்வேறு ஒப்பந்தங்கள், சாசனங்கள், பிரகடனங்கள் மூலமாக அவற்றை ஏற்கவூம் செய்தன. இதன் காரணமாக உரிமைகளினை பாதுகாக்கும் பொறுப்பினை தம் மீது சுமத்தியூம் கொண்டன. ஆயினும் உரிமைகளின் நிலையூம் அவற்றினைப் பாதுகாப்பதற்கான தரமும் உலக நாடுகளனைத்திலும் ஒரே மாதிரியானதாக காணப்படவில்லை. இது இவ்வாறாக இருக்க ஒரு அரசு தனது மக்களை நடத்தும் விதம் தொடர்பில் சர்வதேசம் இரண்டாம் உலகயூத்தம் முடிவடையூம் வரையிலும் அதிக கவனம் செலுத்தவில்லை. இரண்டாம் உலகயூத்தத்தின் போதும் அதன் பின்னரும் மனிதாபிமானத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குற்றங்களினை அடுத்து நாடுகளின் நியாயாதிக்கத்தினுள் வாழும் மக்களைப் பாதுகாப்பது தொடர்பில் சர்வதேசத்தின் கவனம் திரும்பியது. இதன் வெளிப்பாடாகவே நாசி குற்றவாளிகள் நியூரம்பேர்க் ( ரேசநசஅடிநசப ) நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டனர். ஆயினும் இதன் பின்னர் கூட உரிமைகள் மீறல் என்பது உள்நாட்டு விடயமாகவே இருந்துவந்தது. நாடுகளின...

இலங்கையின் சிவில் சேவையில் ஏற்பட்ட மாற்றங்கள்

இலங்கையின் சிவில் சேவையில் ஏற்பட்ட மாற்றங்கள்            சிவில் சேவையினது ஆரம்பம் பற்றி ஒரு தௌpவான வறையறையை மேற்கொள்ள முடியாது. ஆயினும் 16ம் நுhற்றாண்டிலிருந்தெ மானிய முறையை மையமாகக் கொண்ட நிர்வாகத்தை மையப்படுத்தி சிவில் சேவையானது ஆரம்பமானது எனக் கூறப்படுகிறது. ஆரம்ப காலத்தில் சிவில் சேவையினது முக்கியத்துவம் உணரப்படா விட்டாலும் பின்னாளில் அரசினது பணிகள் விரிவடைந்த போது சிவில் சேவையின் முக்கியத்துவம் அதிகரித்தது. இதனாலேயே பொது நிர்வாகவியலின் தந்தையான “வூ+ட்டோ வில்சன்” என்பவர் “பொதுத்துறை நிர்வாகம் அரசாங்கத்தின் தௌpவான பகுதி” எனவூம் “அரசாங்கம் தொழிற்படும் போது நிர்வாகம் தொழிற்படும்” எனவூம் “நிர்வாகம் தொழிற்படும் போது அரசாங்கம் தொழிற்படும்” எனவூம் கூறுகிறார்.           அந்தவகையில் இலங்கையில் மன்னராட்சிக் காலம் தொட்டே மானிய முறையை அடிப்படையாகக் கொண்ட இராசகாரிய முறை நிர்வாகத்தில் பின்பற்றப்பட்டதாக வரலாற்று நுhல்களில் கூறப்படுகிறது. “கமிக” என அழைக்கப்பட்ட கிராமியத் தலைவன் புராதன காலத்தில் காணப்பட்டது இதற்கு தக்க சான்றாகும். இத்தகைய இரா...