பிரித்தானிய பாராளுமன்றம்


பிரித்தானிய பாராளுமன்றம்
இன்றைய கால கட்டத்தில் ஒரு நாட்டுக்கு தேவையான சட்டத்தை இயற்றி நிர்வாகத்தை மேற்கொள்வதற்கு தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்து நாட்டை சிறப்பாக நிருவாகிப்பதற்கு நிருவாகத் துறைக்கு பக்கபலமாய் சட்டத்துறை காணப்படுகிறது. சட்டத்துறையினது வரலாறு நீண்டதாயினும் பிரதிநிதித்துவ சட்டத் துறையின் வரலாறு குறுகியதே. எவ்வாறாயினும் தற்போதுள்ள சட்ட மன்றங்கள் யாவற்றுடனும் ஒப்பிடும் போது பிரித்தானிய சட்ட மன்றம் நீண்ட வரலாற்றினை உடையது. தhய் பாராளுமன்றம் என கூறக்கூடியளவுக்கு தற்போதுள்ள சட்டமன்றங்கள் யாவற்றுக்கும் முன்னோடியாய் விளங்குகிறது.
                                பிரித்தானியாவில் முடியாட்சி நடைபெற்ற காலத்தில் மன்னனுக்கு ஆலோசனை கூறுவதற்கான ஒரு சபை காணப்பட்டது. இச்சபையில் குல மரபுக் குழுக்களின் முக்கியஸ்தர்கள், புத்திசாலிகள் போன்றோர் காணப்பட்டனர். மன்னன் நிருவாகத்தை மேற்கோள்வதற்கான நிதியினைப் பெற நிலப்பிரபுக்களையே நம்பியிருந்தான். இத்தகைய பிரபுக்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டதால் அவர்களின் பிரதிநிதிகளின் ஆலோசனையை பெற்று மன்னன் வரிவிதிப்புகளை மேற்கொண்டான். குhலப்போக்கில் இச்சபையில் இருந்த பிரபுக்கள், குருமார் ஒரு சபையாகவும், மக்களால் தெரிவு செய்யப்பட்டோர் வேறாகவும் கூடினர்.
                                இவ்வாறு வளர்ச்சியடைந்த பிரித்தானிய சட்டத்துறையானது பாராளுமன்றம் என அழைக்கப்படுகிறது. இது பொதுமக்கள் சபை, பிரபுக்கள் சபை எனும் இரு மன்றங்களை கொண்டுள்ளது. கீழ்ச் சபை எனப்படும் பொதுமக்கள் சபையின் அமைவுச் சேர்க்கை பற்றி நோக்கும் போது, இதன் உறுப்பினர்கள் தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறையின் படி தனி அங்கத்துவ தேர்தல் தொகுதிகளில் இருந்து தெரிவு செய்யப்படுகிறார்கள். இதன்படி இங்கு தொகுதி ஆணைக்குழு ஒன்று காணப்படுகிறது. இது பல்வேறு விடயங்களை கவனத்திற் கொண்டு எட்டுத் தொடக்கம் பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை தொகுதியில் மாற்றங்களை மேற்கோள்கிறது. இறுதியாக 2010 இல் நடைபெற்ற தேர்தலில் 650 தொகுதிகளில் இருந்து பிரதிநிதிகள் போட்டியிட்டனர். (பிரித்தானியா 533 தொகுதிகள், வேல்ஸ் 40 தொகுதிகள்,ஸ்கொட்லாந்து 59 தொகுதிகள், வட அயர்லாந்து 18 தொகுதிகள்)
                                இதன் உறுப்பினர்கள் 18 வயதை தாண்டியவரயக இருத்தல் வேண்டும.;(நுடநஉவழைசயட யுனஅinளைவசயவழைn யுஉவ 2006 வரும் முன் 21 வயதாக இருந்தது.) மேலும் பொரளாதார ரீதியில் பாதிக்கப் படாதவராகவும், மன நலம் பாதிக்கப்படாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒருவர் பொதுச்சபை உறுப்பினராக இருக்கும் போது மன நலம் பாதிக்கப்பட்டவர் என இரு நிபுணர்கள் சபாநாயகருக்கு அறிக்கை சமர்ப்பித்தால் அவரது பதவி வெற்றிடமாகும்.(ஆநவெயட ர்நயடவா யுஉவ 1983). அத்துடன் தேசத்துரோக குற்றம் புரியாதவராகவும், ஒரு வருடத்துக்கு மேற்பட்ட காலம் சிறைத் தண்டணை பெறாதவராகவும் இருத்தல் வேண்டும். ஆவம்பத்தில் இச் சபைக்கு பெண்கள் உள்வாங்கப் படாவிடினும் 1918 இல் பெண்களும் வாக்குரிமை பெற்றுக் கொண்ட பின்னர் படிப்படியாக பெண்களும் இச் சபையின் உறுப்பினராகினர்.
                                மேற்படியான தகுதிகளைக் கொண்ட வேற்பாளர்களின் வேட்பு மனுக்களில் குறித்த தொகுதியில் வாக்களிக்கத் தகுதி பெற்ற 10 வாக்காளர்கள் கையொப்பமிட வேண்டும். வேட்பு மனுத் தாக்கலின் போது ஒவ்வொரு வேட்பாளரும் 500 யூரோக்களை வைப்பிலிட வேண்டும். வேட்பாளர்கள் குறைந்தது 5 சத வீதமான வாக்குகளை பெற்றால் கட்டுப்பணம் திருப்பிச் செலுத்தப்படும்.
                                மேற்படி செயன்முறைகள் பூர்த்தி பெற்றதன் பின்னர் தேர்தல் நடைபெற்று, பொதுச் சபையின் முதலாவது கூட்டத் தொடர் முடியின் சிம்மாசன பிரசங்க உரையுடன் ஆரம்பமாகும். இவ்வுரை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் பாராளுமன்ற கூட்டத் தொடரை நடத்திச் செல்ல பொதுச்சபை உறுப்பினருள் இருந்து ஒருவர் சபாநாயகராக தெரிவு செய்யப்படுவார். இவருடன் முன்று சபாநாயகரும் தெரிவு செய்யப்படுவர். சபாநாயகரே பொதுச்சபை கூட்டத்திற்கு தலைமை தாங்கி கூட்டத்தை முன்னெடுத்துச் செல்வார்.
                                பொதுச்சபை மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது. இச்சபையே அரசாங்கமாகவும் கருதப்படுகிறது. அதாவது இச்சபையில் பெரும்பான்மை ஆசனங்களை பெற்ற கட்சியினது தலைவர் முடியினால் பிரதமராக நியமிக்கப்படுவார். பின்னர் பிரதமர் புவியியல்எ தன்மை, கட்சி நலன், கூட்டுப் பொறுப்பு போன்ற விடயங்களைக் கவனத்திற் கொண்டு பொதுச் சபை உறுப்பினர்களில் இருந்து அமைச்சர்களை நியமிப்பார். அத்துடன் ஆளும் கட்சிக்கு அடுத்த நிலையில் உள்ள கட்சி எதிர்க் கட்சியாக கருதப்படும். எனவே பிரித்தானிய அரசாங்கத்தின் ஆளும் எதிர் கட்சிகள் இச்சபையிலிருந்தே தேற்றம் பெறுவதனால் அரசாங்கத்தை அமைத்தல், அதனை கட்டுப்படுத்துதல், பதவியிலிருந்து நீக்குதல் என்பவற்றில் இச்சபையே முக்கிய பங்கு வகிக்கிறது.
                                சட்டத்துறையின் இரு மன்றுகளுடனும் ஒப்பிடும் போது ஆரம்பத்தில் பிரபுக்கள் சபை அதிகாரம் மிக்கதாக விளங்கினாலும் தற்போது பொதுமக்கள் சபையே அதிகாரம் மிக்க மன்றமாகும். பாராளுமன்றத்தின் பிரதான பணி சட்டவாக்கமாகும். அந்தவகையில் பிரித்தானியா உட்பட வேல்ஸ், ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து ஆகிய பகுதிகளுக்கும் சட்டமியற்றுவது பெரிய பிரித்தானிய பாராளுமன்றத்தின் பணியாகும். சட்டவாக்கத்தை பொறுத்தவரையில் பொதுமக்கள் சபை எந்தவொரு மசோதாவையும்(சாதாரண, நிதி, யாப்புத் திருத்த) கொண்டுவந்து, விவாதித்து, உரிய பெரும்பாண்மையால் நிறைவேற்றி பிரபுக்கள் சபைக்கு அனுப்பும். பிரபுக்கள் சபையும் அதனை அங்கீகரித்தால் குறித்த மசோதா முடியின் அங்கீகாரத்துடன் சட்டமாகும்.
                                நிதி மசோதாக்களை பொறுத்தவரையில் கீழ் மன்றமான பொதுமக்கள் சபையே தனி அதிகாரம் மிக்க சபையாகும். ஆந்தவகையில் இச்சபை மட்டுமே நிதி மசோதாக்களை ஆரம்பித்து வைக்கலாம். பிரபுக்கள் சபையனது நிதி மசோதாக்களை ஒரு மாதத்திற்கு தடுத்தாராயலாமே தவிர நிதி மசோதாக்களை கொண்டுவர முடியாது. பிரபுக்கள் சபை நிதி மசோதாக்களை நிராகரித்தாலும் அதனை மீண்டும் நிறைவேற்றுவதன் மூலம் குறித்த மசோதாவை முடியின் சம்மதத்திற்காக அனுப்பி சட்டமாக்கலாம்.
                                எனவே சாதாரண, யாப்புத்திருத்த, நிதி மசோதாக்களை தோற்றுவித்து நிறைவேற்றுவதில் இச்சபையே பிரபுக்கள் சபையை விடவும் ஆதிக்கம் மிக்க சபையாக விளங்குகிறது. பிரபுக்கள் சபை பொதுமக்கள் சபை கொண்டுவரும் மசோதாக்களை தடுத்தாராய்ந்து திருத்தங்கள், மாற்றங்களை மேற்கொண்டாலும், நிராகரித்து அனுப்பினாலும் அதற்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் பொதுமக்கள் சபைக்கில்லை. இச் சபை நிறைவேற்றும் மசோதாக்களை முடியும் அங்கிகரிக்குமே தவிர மறுப்பதில்லை. எனவே சட்டவாக்க செயன்முறையில் பொதுமக்கள் சபையே அதிகாரம் மிக்க சபையாகும்.
                                நிர்வாகத்துறை தொடர்பிலும் பொதுமக்கள் சபையானது அதிகாரம் கொண்டுள்ளது. பொதுமக்கள் சபையிலிருந்தே நிர்வாகத் துறைக்கு பொறுப்பான பிரதமரும் அமைச்சர்களும் நியமிக்கப்படுவதனால் நிரிவாகத் துறையை கட்டுப்படுத்தக் கூடிய இயலுமையை பொதுமக்கள் சபை பெற்றுக்கொள்கிறது. அந்தவகையில் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களிடம் வினாத் தொடுத்தல், நிர்வாகத் துறை தயாரித்த வரவு செலவுத் திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்காது மறுத்தல், அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரல் என்பவற்றின் மூலமாக நிர்வாகத் துறையை கட்டுப்படுத்தவும், பதவி நீக்கம் செய்யவும் பொதுச்சபை அதிகாரம் பெற்றுள்ளது.
                                பொதுமக்கள் சபையிலிருந்தே உண்மை நிர்வாகிகள் தெரிவு செய்யப்படுவதனால் பொதுமக்கள் சபைக்கு இவர்கள் பொறுப்புக் கூறுவது அவசியமாகிறது. இதன் மூலம் நிருவாகத் துறையை பொதுமக்கள் சபை கட்டுப்படுத்த முடியுமாயினும் நடைமுறையில் அங்கு காணப்படும் கட்சித் தொடர்பின் காரணமாக, அதாவது பொதுமக்கள் சபையில் பெரும்பாண்மையான ஆசனங்களை பெற்ற கட்சியின் உறுப்பினர் சிலரே பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களாக இருப்பதனால் நிர்வாகத் துறையின் தீர்மானத்திற்கு பொதுமக்கள் சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கும் நிலை காணப்படுகிறதே தவிர எதிர்க்கும் நிலை காணப்படுவதில்லை.
                                பொதுமக்கள் சபையானது நீதித்துறை தொடர்பில் அதிக அதிகாரங்களை பெறாவிடினும் நீதிபதிகளை குற்ற விசாரனை மூலம் பதவி நீக்கம் செய்ய முடியும். இவ்வாறாக சட்டத் துறை சார்ந்து மட்டுமல்லாது நிருவாகத்துறை, நீதித்துறை தொடர்பிலும் தனது அதிகாரங்களை பயன்படுத்தி பிரித்தானிய அரசியலில் பொதுமக்கள் சபை முக்கிய பங்கு வகிக்கிறது.      
                                   
                                இன்றைய காலகட்டத்தில் ஒரு நாட்டுக்கு தேவையான சட்டத்தை இயற்றி நிருவாகத்தை மேற்கொள்வதற்கு தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்து நாட்டை சிறப்பாக நிருவாகிப்பதற்கு நிருவாகத் துறைக்கு பக்கபலமாய் சட்டத்துறை காணப்படுகிறது. சட்டத்துறையினது வரலாறு நீண்டதாயினும் பிரதிநிதித்துவ சட்டத் துறையின் வரலாறு குறுகியதே. எவ்வாறாயினும் தற்போதுள்ள சட்ட மன்றங்கள் யாவற்றுடனும் ஒப்பிடும் போது பிரித்தானிய சட்ட மன்றம் நீண்ட வரலாற்றினை உடையது. தாய் பாராளுமன்றம் என கூறக்கூடியளவுக்கு தற்போதுள்ள சட்டமன்றங்கள் யாவற்றுக்கும் முன்னோடியாய் விளங்குகிறது.
                                பிரித்தானியாவில் முடியாட்சி நடைபெற்ற காலத்தில் மன்னனுக்கு ஆலோசனை கூறுவதற்கான ஒரு சபை காணப்பட்டது. இச்சபையில் குல மரபுக் குழுக்களின் முக்கியஸ்தர்கள், புத்திசாலிகள் போன்றோர் காணப்பட்டனர். மன்னன் நிருவாகத்தை மேற்கொள்வதற்கான நிதியினைப் பெற நிலப்பிரபுக்களையே நம்பியிருந்தான். இத்தகைய பிரபுக்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டதால் அவர்களின் பிரதிநிதிகளின் ஆலோசனையை பெற்று மன்னன் வரிவிதிப்புகளை மேற்கொண்டான். காலப்போக்கில் இச்சபையில் இருந்த பிரபுக்கள், குருமார் ஒரு சபையாகவும், மக்களால் தெரிவு செய்யப்பட்டோர் வேறாகவும் கூடினர்.
                                இவ்வாறு வளர்ச்சியடைந்த பிரித்தானிய சட்டத்துறையானது பாராளுமன்றம் என அழைக்கப்படுகிறது. இது பொதுமக்கள் சபை, பிரபுக்கள் சபை எனும் இரு மன்றங்களை கொண்டுள்ளது. கீழ்ச் சபை எனப்படும் பொதுமக்கள் சபையின் அமைவுச் சேர்க்கை பற்றி நோக்கும் போது, இதன் உறுப்பினர்கள் தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறையின் படி தனி அங்கத்துவ தேர்தல் தொகுதிகளில் இருந்து தெரிவு செய்யப்படுகிறார்கள். இதன்படி இங்கு தொகுதி ஆணைக்குழு ஒன்று காணப்படுகிறது. இது பல்வேறு விடயங்களை கவனத்திற் கொண்டு எட்டுத் தொடக்கம் பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை தொகுதியில் மாற்றங்களை மேற்கொள்கிறது. இறுதியாக 2010 இல் நடைபெற்ற தேர்தலில் 650 தொகுதிகளில் இருந்து பிரதிநிதிகள் போட்டியிட்டனர். (பிரித்தானியா 533 தொகுதிகள், வேல்ஸ் 40 தொகுதிகள், ஸ்கொட்லாந்து 59 தொகுதிகள், வட அயர்லாந்து 18 தொகுதிகள்)
                                இதன் உறுப்பினர்கள் 18 வயதை தாண்டியவராக இருத்தல் வேண்டும.;(நுடநஉவழைசயட யுனஅinளைவசயவழைn யுஉவ 2006 வரும் முன் 21 வயதாக இருந்தது.) மேலும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படாதவராகவும், மன நலம் பாதிக்கப்படாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒருவர் பொதுச்சபை உறுப்பினராக இருக்கும் போது மன நலம் பாதிக்கப்பட்டவர் என இரு நிபுணர்கள் சபாநாயகருக்கு அறிக்கை சமர்ப்பித்தால் அவரது பதவி வெற்றிடமாகும்.(ஆநவெயட ர்நயடவா யுஉவ 1983). அத்துடன் தேசத்துரோக குற்றம் புரியாதவராகவும், ஒரு வருடத்துக்கு மேற்பட்ட காலம் சிறைத் தண்டணை பெறாதவராகவும் இருத்தல் வேண்டும். ஆரம்பத்தில் இச் சபைக்கு பெண்கள் உள்வாங்கப் படாவிடினும் 1918 இல் பெண்களும் வாக்குரிமை பெற்றுக் கொண்ட பின்னர் படிப்படியாக பெண்களும் இச் சபையின் உறுப்பினராகினர்.
                                மேற்படியான தகுதிகளைக் கொண்ட வேற்பாளர்களின் வேட்பு மனுக்களில் குறித்த தொகுதியில் வாக்களிக்கத் தகுதி பெற்ற 10 வாக்காளர்கள் கையொப்பமிட வேண்டும். வேட்பு மனுத் தாக்கலின் போது ஒவ்வொரு வேட்பாளரும் 500 யூரோக்களை வைப்பிலிட வேண்டும். வேட்பாளர்கள் குறைந்தது 5 சத வீதமான வாக்குகளை பெற்றால் கட்டுப்பணம் திருப்பிச் செலுத்தப்படும்.
                                மேற்படி செயன்முறைகள் பூர்த்தி பெற்றதன் பின்னர் தேர்தல் நடைபெற்று, பொதுச் சபையின் முதலாவது கூட்டத் தொடர் முடியின் சிம்மாசன பிரசங்க உரையுடன் ஆரம்பமாகும். இவ்வுரை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் பாராளுமன்ற கூட்டத் தொடரை நடத்திச் செல்ல பொதுமக்கள் சபை உறுப்பினருள் இருந்து ஒருவர் சபாநாயகராக தெரிவு செய்யப்படுவார். இவருடன் முன்று துணை சபாநாயகரும் தெரிவு செய்யப்படுவர். சபாநாயகரே பொதுமக்கள் சபை கூட்டத்திற்கு தலைமை தாங்கி கூட்டத்தை முன்னெடுத்துச் செல்வார். பொதுமக்கள் சபையின் பதவிக் காலம் 5 வருடங்களாகும்.
                                பொதுமக்கள் சபை மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது. இச்சபையே அரசாங்கமாகவும் கருதப்படுகிறது. அதாவது இச்சபையில் பெரும்பான்மை ஆசனங்களை பெற்ற கட்சியினது தலைவர் முடியினால் பிரதமராக நியமிக்கப்படுவார். பின்னர் பிரதமர் புவியியல் தன்மை, கட்சி நலன், கூட்டுப் பொறுப்பு போன்ற விடயங்களைக் கவனத்திற் கொண்டு பொதுச் சபை உறுப்பினர்களில் இருந்து அமைச்சர்களை நியமிப்பார். அத்துடன் ஆளும் கட்சிக்கு அடுத்த நிலையில் உள்ள கட்சி எதிர்க் கட்சியாக கருதப்படும். எனவே பிரித்தானிய அரசாங்கத்தின் ஆளும் எதிர் கட்சிகள் இச்சபையிலிருந்தே தேற்றம் பெறுவதனால் அரசாங்கத்தை அமைத்தல், அதனை கட்டுப்படுத்துதல், பதவியிலிருந்து நீக்குதல் என்பவற்றில் இச்சபையே முக்கிய பங்கு வகிக்கிறது.
                                சட்டத்துறையின் இரு மன்றுகளுடனும் ஒப்பிடும் போது ஆரம்பத்தில் பிரபுக்கள் சபை அதிகாரம் மிக்கதாக விளங்கினாலும் தற்போது பொதுமக்கள் சபையே அதிகாரம் மிக்க மன்றமாகும். பாராளுமன்றத்தின் பிரதான பணி சட்டவாக்கமாகும். அந்தவகையில் பிரித்தானியா உட்பட வேல்ஸ், ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து ஆகிய பகுதிகளுக்கும் சட்டமியற்றுவது பெரிய பிரித்தானிய பாராளுமன்றத்தின் பணியாகும். சட்டவாக்கத்தை பொறுத்தவரையில் பொதுமக்கள் சபை எந்தவொரு மசோதாவையும்(பொது, நிதி, யாப்புத் திருத்த) கொண்டுவந்து, விவாதித்து, உரிய பெரும்பாண்மையால் நிறைவேற்றி பிரபுக்கள் சபைக்கு அனுப்பும். பிரபுக்கள் சபையும் அதனை அங்கீகரித்தால் குறித்த மசோதா முடியின் அங்கீகாரத்துடன் சட்டமாகும்.
                                நிதி மசோதாக்களை பொறுத்தவரையில் கீழ் மன்றமான பொதுமக்கள் சபையே தனி அதிகாரம் மிக்க சபையாகும். அந்தவகையில் இச்சபை மட்டுமே நிதி மசோதாக்களை ஆரம்பித்து வைக்கலாம். பிரபுக்கள் சபையானது நிதி மசோதாக்களை ஒரு மாதத்திற்கு தடுத்தாராயலாமே தவிர நிதி மசோதாக்களை கொண்டுவர முடியாது. பிரபுக்கள் சபை நிதி மசோதாக்களை நிராகரித்தாலும் அதனை மீண்டும் நிறைவேற்றுவதன் மூலம் குறித்த மசோதாவை முடியின் சம்மதத்திற்காக அனுப்பி சட்டமாக்கலாம்.
                                எனவே பொது, யாப்புத்திருத்த, நிதி மசோதாக்களை தோற்றுவித்து நிறைவேற்றுவதில் இச்சபையே பிரபுக்கள் சபையை விடவும் ஆதிக்கம் மிக்க சபையாக விளங்குகிறது. பிரபுக்கள் சபை பொதுமக்கள் சபை கொண்டுவரும் மசோதாக்களை தடுத்தாராய்ந்து திருத்தங்கள், மாற்றங்களை மேற்கொண்டாலும், நிராகரித்து அனுப்பினாலும் அதற்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் பொதுமக்கள் சபைக்கில்லை. இச் சபை நிறைவேற்றும் மசோதாக்களை முடியும் அங்கிகரிக்குமே தவிர மறுப்பதில்லை. எனவே சட்டவாக்க செயன்முறையில் பொதுமக்கள் சபையே அதிகாரம் மிக்க சபையாகும்.
                                நிர்வாகத்துறை தொடர்பிலும் பொதுமக்கள் சபையானது அதிகாரம் கொண்டுள்ளது. பொதுமக்கள் சபையிலிருந்தே நிர்வாகத் துறைக்கு பொறுப்பான பிரதமரும் அமைச்சர்களும் நியமிக்கப்படுவதனால் நிர்வாகத் துறையை கட்டுப்படுத்தக் கூடிய இயலுமையை பொதுமக்கள் சபை பெற்றுக்கொள்கிறது. அந்தவகையில் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களிடம் வினாத் தொடுத்தல், நிர்வாகத் துறை தயாரித்த வரவு செலவுத் திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்காது மறுத்தல், அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரல் என்பவற்றின் மூலமாக நிர்வாகத் துறையை கட்டுப்படுத்தவும், பதவி நீக்கம் செய்யவும் பொதுச்சபை அதிகாரம் பெற்றுள்ளது.
                                பொதுமக்கள் சபையிலிருந்தே உண்மை நிர்வாகிகள் தெரிவு செய்யப்படுவதனால் பொதுமக்கள் சபைக்கு இவர்கள் பொறுப்புக் கூறுவது அவசியமாகிறது. இதன் மூலம் நிருவாகத் துறையை பொதுமக்கள் சபை கட்டுப்படுத்த முடியுமாயினும் நடைமுறையில் அங்கு காணப்படும் கட்சித் தொடர்பின் காரணமாக, அதாவது பொதுமக்கள் சபையில் பெரும்பாண்மையான ஆசனங்களை பெற்ற கட்சியின் உறுப்பினர் சிலரே பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களாக இருப்பதனால் நிர்வாகத் துறையின் தீர்மானத்திற்கு பொதுமக்கள் சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கும் நிலை காணப்படுகிறதே தவிர எதிர்க்கும் நிலை காணப்படுவதில்லை.
                                பொதுமக்கள் சபையானது நீதித்துறை தொடர்பில் அதிக அதிகாரங்களை பெறாவிடினும் நீதிபதிகளை குற்ற விசாரனை மூலம் பதவி நீக்கம் செய்ய முடியும். இவ்வாறாக சட்டத் துறை சார்ந்து மட்டுமல்லாது நிருவாகத்துறை, நீதித்துறை தொடர்பிலும் தனது அதிகாரங்களை பயன்படுத்தி பிரித்தானிய அரசியலில் பொதுமக்கள் சபை முக்கிய பங்கு வகிக்கிறது.      
                                அடுத்து பிரித்தானிய அரசியலில் நீண்ட கால மரபினைக் கொண்ட பழமையின் சின்னமாக மேற்சபையான பிரபுக்கள் சபை விளங்குகிறது. ஆரம்பம் முதற்கொண்டு அதிக உறுப்பினர்களைக் கொண்டும், அதிகாரத்தில் பொதுமக்கள் சபையோடு ஒப்பிடும் போது அதிக அதிகாரத்தை அனுபவித்தும் வந்த பிரபுக்கள் சபையானது பல்வேறு கட்டங்களில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள் மூலமாகவும், பிரித்தானிய அரசியற் சூழ்நிலைக்கு ஏற்றாற் போலும் பல்வேறு மாற்றங்களை தன்னகத்தே உள்வாங்கி இன்னும் பிரித்தானிய அரசியலில் நிலைத்துள்ளது.
                                இதன் உறுப்பினராக ஒருவர் வருவதாயின் 21 வயதை பூர்த்தி செய்தல் அவசியமாகும். இதன் உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்படுவதில்லையாயினும் சிலர் பரம்பரையாகவும், மரபு வழியாகவும் நியமனம் பெறுவதுடன் மேலும் சிலர் பொதுச் சபையில் அங்கத்துவம் பெறும் கட்சிகளின் சார்பில் நியமிக்கப்படுகின்றனர். 1958இன் பின் இச்சபையில் பெண்களும் அங்கத்துவம் வகிப்பதற்கான வாய்ப்புக் கிடைத்தது.
                                பிரபுக்கள் சபையின் அமைவுச் சேர்க்கையில் மதப் பிரபுக்கள், சட்டப் பிரபுக்கள், ஆயுட்கால பிரபுக்கள், பரம்பரைப் பிரபுக்கள் ஆகியோர் முக்கியம் பேறுகின்றனர். ஆரச தேவாலயமாகக் கருதப்படும் இங்கிலாந்து திருச்சபையை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் மேற்ராணிமார்களும், அதி மேற்ராணிமார்களும் மதப் பிரபுக்களாக பிரபுக்கள் சபையில் அங்கம் வகிக்கின்றனர். இவர்கள் இளைப்பாறும் வரையில் பதவியைத் தொடர முடியுமாயினும் இராஜினாமா செய்தால் வயது மூப்பின் அடிப்படையில் வெற்றிடம் நிரப்பப்படும்.
                                1876ஆம் ஆண்டு சட்டத்தின் படி(யுppநடடயவந துரசளைனiஉவழைn யுஉவ) சட்டப் பிரபுக்களாக 12 பேர் நீதித்துறையில் பாண்டித்தியம் பெற்ற அறிஞர்களிலிருந்து பிரதமரால் தெரிவு செய்யப்பட்டு முடியினால் நியமிக்கப்படுகின்றனர். கீழ்நிலை நீதிமன்றங்களில் இருந்து வரும் மேன்முறையீடுகளை விசாரணை செய்வதே இவர்களின் முக்கிய பணியாகும். இவர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை 70ஆக காணப்பட்டாலும் அரசாங்கத்தினால் 75 வயது வரையும் பதவியில் நீடிக்கப்படலாம். இதன் தலைவரே நீதி அமைச்சராகவும் செயற்பட்டார். நீதித் துறையின் சுதந்திரத்தை பாதுகாக்கும் பெருட்டு இவர்கள் அரசியல் விவாதங்களில் ஈடுபடுவதில்லை.
                                பிரபுக்கள் சபையில் அதிக எண்ணிக்கையில் காணப்படுவோர் ஆயுட்கால பிரபுக்களே. பல துறைகளிலும் பாண்டித்தியம் பெற்றவர்களின் சேவையை நாட்டுக்கு பெற்றுக் கொடுக்கும் நேக்கில் பிரதமரின் ஆலோசனைக் கிணங்க முடியினால் நியமிக்கப்படுகின்றனர். தற்போது இவர்களின் எண்ணிக்கை 570 சுற்றியதாகக் காணப்படுகிறது. இவர்கள் ஆயுட்காலம் முழுவதும் இதில் அங்கம் வகிக்கலாம். இறப்பின் காரணமாக இவர்களது பதவி முடிவுறும்.
                                வாரிசு உரிமைப்படி பதவியைப் பெற்று வந்தவர்கள் பரம்பரை பிரபுக்கள் எனப்பட்டனர். 1997இல் டொனி பிளேயர் தலைமையிலான தொழிற் கட்சி ஆட்சிக்கு வந்ததையடுத்து 1999இல் பிரபுக்கள் சபையில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களின் படி இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 92ஆக வறையறுக்கப்பட்டது. இவர்களுள் 15 பேர் முழுச் சபையாலும் நியமிக்கப்பட்டனர். 75 பேர் அரசியல் கட்சி சார்புள்ள, சார்பற்ற உறுப்பினர்களுள் இருந்து நியமிக்கப்பட்டதுடன் இருவர் முடியினால் நியமிக்கப்பட்டனர்.
     இதன்படி பிரபுக்கள் சபையின் ஒரு பகுதியினர் மரபுரிமையாக நியமனம் பெறுவதுடன் ஏனையோர் ஜனநாயக முறைப்படி நியமிக்கப்படுகின்றனர். இதனால் மொன்றோ(ஆரசெழ)  எனுமறிஞர் பிரபுக்கள் சபையைஉயிர்த் துடிப்புள்ள கீர்த்திமிகு மனிதர்களைக் கொண்ட வெஸ்ட்மினிஸ்ட் மாளிகைஎன கூறுகிறார்.
                                இவ்வாறாக அமையப் பெறுகின்ற பிரபுக்கள் சபையானது பொது மக்கள் சபையுடன் இணைந்து சட்டவாக்க செயற்பாட்டில் ஈடுபடுகிறது. அந்தவகையில் பிரபுக்கள் சபை பெற்றுள்ள சட்டவாக்க அதிகாரம் பற்றி நோக்கும் போது, ஆரம்பத்தில் பிரபுக்கள் சபையே பொதுமக்கள் சபையை விட சட்டவாக்கத்தில் அதிக அதிகாரங்களை பெற்றிருந்தாலும் 1911ஆம், 1947ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட சட்டங்களின் மூலமாக அதன் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டது. இதற்கமைய நிதி மசோதா தவிர்ந்த ஏனைய மசோதாக்களை இச்சபை கொண்டுவர முடியுமாயினும் நடைமுறையில் அரசியல் சாராத நிபுணத்துவத்தோடு தொடர்புடைய மசோதாக்களையே இச் சபை கொண்டுவருகிறது. இதனை முதலாம் மன்றும் முடியும் அங்கீகரிக்கும் போது மசோதா சட்டமாகும்.
                                மேலும் சட்டவாக்கத்தோடு தொடர்புறும் வகையில் சட்ட மசோதாக்களை தடுத்தாராய்கிறது. அந்தவகையில் முதலாம் மன்றினால் கொண்டுவரப்படும் பொது மசோதாக்களை ஒரு வருடத்திற்கு(இரு பாராளுமன்ற அமர்வுகளுக்கு) மேற்படாத வகையிலும், நிதி மசோதாக்களை ஒரு மாதத்திற்கு மேற்படாத வகையிலும் தனது உறுப்பினர்களின் நிபுணத்துவத்தை பயன்படுத்தி தடுத்தாராய்கிறது. இவ்வாறு தடுத்தாராய்ந்து திருத்தங்களை மேற்கொள்ளவும், நிராகரித்து அனுப்பவும் பிரபுக்கள் சபையினால் முடியுமாயினும் அதனை கவணத்திற் கொள்ளாது முடியின் சம்மதத்தை பெற்று சட்டமாக்கக் கூடிய இயலுமையை பொதுமக்கள் சபை பெற்றுள்ளது.
                                அரசாங்கத்தின் கொள்கைகள், நிர்வாகம் போன்றவற்றை ஆழ்ந்து பரிசோதனை செய்து அமைச்சர்களிடம் வினாக்களைத் தொடுத்து, பொது நலனோடு தொடர்பான கலந்துரையாடல்கள், விவாதங்களை நடத்துவதன் மூலமாக பிரபுக்கள் சபையானது நிர்வாகத் துறை தொடர்பான அதிகாரங்களையும் அனுபவிக்கிறது. இவ்வாறு செய்வதன் மூலமாக பொதுமக்கள் சபை கவணிக்காத விடயங்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான விவாதங்களை மேற்கொண்டு நிர்வாகத்துறையை வழிப்படுத்தி பொதுமக்கள் சபையின் வேலைப் பளுவைக் குறைக்க பிரபுக்கள் சபை உதவுவதுடன் அரசாங்கத்தின் கொள்கைகள் செயற்பாடுகள் தொடர்பான பொதுசன அபிப்பிராயத்தை கட்டியெழுப்புவதிலும் பிரபுக்கள் சபை முக்கிய பங்குவகிக்கிறது.
                                பிரபுக்கள் சபையானது நிபுணத்துவம் மிக்க அறிஞர்கள் பலரைக் கொண்டதோர் சபையாகும். இத்தகைய நிபுணர்களை உள்ளடக்கிய பல தெரிவுக் குழுக்களை இச் சபை கொண்டுள்ளது. அத்தகைய குழுக்கள் உள்ளக முகாமைத்துவம், அரசாங்க நிர்வாகம் போன்றவற்றோடு தொடர்புடைய வகையில் நடுநிலையான நிபுணத்துவத்தை அரசாங்கத்துக்கு பெற்றுக் கொடுக்கிறது. இது போன்ற பணியினை பொதுமக்கள் சபை மேற்கௌ;ளும் போதும் அவை அரசாங்க திணைக்களங்கள், அரசியல் கொள்கைகள் போண்றவற்றை பிரதிபலிக்க பிரபுக்கள் சபையாலேயே நடுநிலையான நிபுணத்துவத்தினை வழங்க முடியும்.
                                மேலும் சட்டப் பிரபுக்கள் மூலமாக நீதித்துறை அதிகாரங்களையும் பிரபுக்கள் சபை பெற்றிருந்தது. அந்தவகையில் சட்டப்பிரபுக்களே மேன்முறையீட்டு வழக்குகளை விசாரித்ததுடன் இதன் தலைவரே நீதி அமைச்சராகவும் செயற்பட்டார். ஆயினும் 2005ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஊழளெவவைரவழையெட சுநகழசஅ யுஉவ இன் படி தனியான உயர் நீதிமன்றம்(ளுரிசநஅந ஊழரசவ) அமைக்கப்பட்டமையால் பிரபுக்கள் சபையின் நீதித் துறை சார்ந்த அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டது. அத்துடன் நீதிபதிகளை பதவி நீக்கும் தீர்மானம் இச்சபையிலும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதும் பிரபுக்கள் சபை கொண்டுள்ள நீதித் துறை சார்ந்த அதிகாரங்களாகும்.
                                இவ்வாறாக பிரபுக்கள் சபை அதிகாரங்களை பெற்றுள்ள போதிலும் அது மக்களால் தெரிவு செய்யப்பட்ட மன்றத்தினது செயற்பாடுகளில் தலையிடல், சட்டவாக்கத்தில் காலதாமதத்தை ஏற்படுத்தல், பலவீனமான அதிகாரத்தை பெற்றிருத்தல், நாட்டிற்கு பெரும் பொருளாதார சுமையாக விளங்குதல் போன்ற காரணங்களினால் பிரபுக்கள் சபை பிரித்தானிய அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட வேண்டும் எனக் கூறப்பட்டாலும், நிபுணத்துவம் மிக்க, அரசியலில் ஈடுபட விரும்பாத அறிஞர்களின் சேவையை நாட்டுக்கு பெற்றுக் கொடுத்தல், பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்குதல் என்பவற்றில் இச் சபை பெரும் பங்காற்றுவதனாலும் எல்லாவற்றையும் விட பிரித்தானிய மக்கள் பழமையை போற்றும் பண்பு கொண்டவர்களாக இருப்பதனாலும் பிரபுக்கள் சபை இன்றும் பிரித்தானிய அரசியலில் நிலைத்து நிற்கிறது.
                                எவ்வாறாயினும் மேற்சபையான பிரபுக்கள் சபையை பொதுமக்கள் சபையுடன் ஒப்பிடுகையில் அது கீழ்நிலையில் வைத்து மதிக்கப்படுகின்ற ஒரு சபையாகவே விளங்குகிறது. இதனால் பிரித்தானிய பாராளுமன்றம் என்பது பொதுமக்கள் சபையையே குறிக்குமளவுக்கு பிரபுக்கள் சபையின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
                                மேற்படியான அதிகாரங்களைக் பெற்றுள்ள பிரித்தானியாவின் ஈரங்க மன்ற சட்டத்துறையான பாராளுமன்றம், பாராளுமன்ற இறைமைக் கோட்பாடு நிலைநிறுத்தப்பட்ட ஒரு சபையாகக் காணப்படுகிறது. இதன் பொருள்சட்டவாக்கத்தில் பாராளுமன்றமே முதன்மையானதும் தன்னிகரற்றதும்என்பதாகும். இந்நிலையை சேர்.ஐவர் ஜெனிங்ஸ்ஆணைப் பெண்ணாக்கவும், பெண்ணை ஆணாக்கவும் தவிர்ந்த, ஏனைய எந்தவொரு இயற்கையான செயற்பாடுகளையும் மேற்கொள்ள பிரித்தானிய பாராளுமன்றத்துக்கு அதிகாரம் உண்டுஎனக் கூறுகிறார்.
                                இதன்படி பெரிய பிரித்தானியாவின் பாராளுமன்றமானது தனது அதிகாரத்திற்கு சமாந்தரமானதும், சவால்விடக் கூடியதுமான எந்தவொரு அமைப்புக்களுமின்றி சட்டவாக்கத்தில் தனது மேலாண்மையை நிலை நிறுத்தியுள்ளதுடன் பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்டம் பற்றி நீதிமன்றத்தில் கூட கேள்வியெழுப்ப முடியாத நிலை காணப்படுகிறது. இதனால் பிரித்தானிய பாராளுமன்றம் இறைமையின் உறைவிடமாக விளங்குகிறது.           
2013.05.05




Comments

Post a Comment

Popular posts from this blog

இலங்கையின் சிவில் சேவையில் ஏற்பட்ட மாற்றங்கள்

மனித உரிமைகள்