மியன்மாரின் மோதல்கள் – கோட்பாட்டு அறிமுகம்


மியன்மாரின் மோதல்கள் – கோட்பாட்டு அறிமுகம்

இந்தியா, பங்களாதேஷ், சீனா, லாவோஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளினால் சூழப்பட்டு தென்கிழக்கு தென்மேற்கு எல்லைகளாக முறையே வங்காள விரிகுடாவையூம் இந்து சமுத்திரத்தையூம் கொண்டுள்ள நாடு பர்மாவாகும். சனத்தெகையைப் பெறுத்த வரையில் உலகின் 24வது இடத்தினையூம் நிலப்பரப்பு அடிப்படையில் உலகில் 40ஆவது இடத்தினையூம் பெற்று விளங்குகிறது. இத்துணை பெரிய நிலவளத்தினையூம் மனிதவளத்தினையூம் பர்மா கொண்டிருந்தாலும் உலக அரங்கில் பர்மா எப்போதும் முரண்பாடுகளின் தேசமாகவே காட்சியளிக்கிறது. இதற்குக் காரணம் பர்மாவில் காணப்படும் இனப்பல்வகைமையின் சமப்படுத்த முடியாத பிரிவினையாகும். இங்கு இனம், மதம், மொழி அடிப்படையில் 135 இனக்குழுக்கள் வாழ்கின்றன. எவ்வாறெனினும் இவற்றை எட்டு பிரதான தேசிய இனங்களுக்குள் அடக்க முடியூம். எனவே இத்தகு பல்வகைமை நிலவூம் நாட்டில் இனங்களுக்கிடையே சமரசத்தை ஏற்படுத்தத் தவறுமிடத்தில் முரண்பாடுகள் ஏற்படுவதும் பின் அவை மோதல்களாக வளர்வதும் தடுக்க முடியாத ஒன்றே. பர்மிய முரண்பாடுகளை அறிந்து கொள்வதற்கு அதன் வரலாற்றினை பின்நோக்கிப் பார்ப்பதவசியம்.
பர்மா பிரித்தானியாவால் மூன்று கட்டங்களாக (1824-1885)  கைப்பற்றப்பட்டதுடன் இந்தியாவூடன் இணைத்தே நிர்வகிக்கப்பட்டது. பிரித்தானியரை பர்மாவில் இருந்து விரட்டுவதற்காக ஆங் சான் தலைமையிலான 29 பேர் கொண்டதோர் குழுவினர் ஜப்பான் சென்று இராணுவப் பயிற்சி பெற்று பர்மிய சுதந்திர இராணுவத்தை (டீரசஅய ஐனெநிநனெநnஉந யூசஅல) அமைத்தனர். ஆயினும் ஜப்பான் 2ம் உலக யூத்தத்த காலத்தில் பர்மாவை கைப்பற்றியதுடன் புதியதோர் அரசாங்கத்தையூம் அமைத்தது. எனினும் நட்பு நாடுகளின் படைகள் 1944ன் இறுதிப்பகுதியிலிருந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயனாக பர்மா 1945 மீண்டும் கைப்பற்றப்பட்டது. 1947 டிசம்பர் 10ம் திகதி பர்மாவூக்கான சுதந்திரச்சட்டம் பிரித்தானிய பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டதையடுத்து 4 ஜனவரி 1948ல் பர்மா சுதந்திரமடைந்ததுடன் புதிய யாப்பும் நடைமுறைக்கு வந்தது. இதனிடையில் 1947ல் நடைபெற்ற பாங்லோங் மகாநாட்டில் (Pயபெடழபெ ஊழகெநசநnஉந) இல் ஆன் சான் அவர்கள் சின் (hin) கச்சின்(முயஉhin) சான் (ளுhn) மற்றும் வேறு சிறுபான்மை தேசியவாதிகளிடம் நிர்வாகஇநீதிஇ சட்டம் ஆகிய அதிகாரங்களை அவரவர் மாநிலங்களில் அனுபவிப்பதுஇ மொழிஇ கலாசாரம்இ சமயம் போன்றவற்றை பாதுகாத்தல் தொடர்பில் உறுதியளித்தார். இதனடிப்படையில் ஆன் சான் அவர்கள் மதசார்பற்ற பன்மைத்துவத்தினால் பலம் பெறும் பர்மாவை அமைக்க விரும்பினார் என்பதை அறியமுடிகிறது. ஆயினும் சுதந்திரம்  பெறுவதற்கு முன்பாகவே ஆன் சான் கொல்லப்பட்டதுடன் சுதந்திரம் பெற்ற பின்னர்இ பர்மிய யாப்பும் பர்மிய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட சட்டங்களும் ஆன் சான் அவர்களின் கனவூகளையூம் கொன்றன.
குறிப்பாக சுதந்திரமடைந்த ஓர் நாடு தன்னை ஓர் இறைமை பொருந்திய அரசாக ஒழுங்கமைத்துக் கொள்வதற்கும் மற்றைய அரசுகளோடு போட்டியிடுவதற்கும் உள்ளுரில் அரசியல் ஒற்றுமையை ஏற்படுத்துவது அவசியமாகும். இவ் அரசியல் ஒற்றுமையை ஏற்படுத்துவதில்ஒன்றுதிரட்டுதல்என்னும் பொறிமுறை அவசியமாகிறது. மரபு ரீதியான அடையாளங்களை அழித்துவிட்டு புதிய தேசிய அடையாளங்களை மீள் உருவாக்கம் செய்வதனையே ஒன்றுதிரட்டல் செயன்முறையானது வேண்டி நிற்கிறது. ஆனால் இவ் ஒன்றுதிரட்டல் செயன்முறையானது புதிய அடையாளங்களைத் தேடுவதற்குப் பதிலாக தேசிய பெரும்பாண்மை இனத்தினது அடையாளங்களிளை மீள் எழச் செய்வதாகவே அமைகிறது. சுருக்கமாகக் கூறின் தேசத்தைக் கட்டியெழுப்பும் செயன்முறையில் தேசியவாதம் பெரும்பான்மை இனத்துவம் எனும் இலகுவான தளத்தைப் பெற்றுக் கொள்கிறது. தேசத்தைக் கட்டியெழுப்பும் செயன்முறையில் ஏற்பட்ட தோல்வியானது ஏனைய சிறுபான்மை இனங்களை அரசியல் செயற்பாட்டில் இருந்து ஓரங்கட்டியது. அல்லது சிறுபான்மையினர் தாமாகவே பின்வாங்கிக் கொண்டனர். இத்தகைய நிலையில் சிறுபான்மையினர் தம் அரசியல் சுதந்திரத்திற்காக போராடத் தொடங்கினர். இத்தகையதோர் நிலையினையே பர்மாவிலும் நாம் காணமுடியூம்.
பர்மா சுதந்திரத்திற்குப் பின்னர் ஒரு தேசம்இ ஒரு மதம்இ ஒரு இனம் என்ற கொள்கையையே பின்பற்றத் தொடங்கியது. குறிப்பாக 1961ல் யூ+ நுh (ரு ரே) வினது ஆட்சிக் காலத்தில் பௌத்தம் அரச மதமானதுஇ 1962 அச்சு மற்றும் வெளியீடு பதிவூ செய்தல் சட்டம்இ 1965 தணிக்கைச் சட்டம் என்பன சிறுபான்மையினரின் மொழியூரிமையைப் பறித்தது. இது தவிர இராணுவ ஆட்சியின் போது சிறுபான்னையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அத்துமீறல்கள் போன்றன பர்மாவில் ஏற்படும் உள்நாட்டு மோதல்களுக்கு காரணமாகிறது.
அந்தவகையில் மியன்மாரில் ஏற்பட்ட பிரதான மோதல்களாக கச்சின்(முயஉhin) கயா(முயலயா) கயின்(முயலin) ரகின்(சுயமாiநெ) ஷான்(ளுhn) ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டு வருகின்ற மோதல்களைக் குறிப்பிடலாம். மேற்படி பிரதேசங்களில் வாழும் சிறுபான்மையினர் தம் சுதந்திரத்தினை வலியூறுத்தியோ சமஷ்டி கோரிக்கையை முன்வைத்தோ தம் இனஇ மத விடுதலைக்காக போராடிவருகின்றனர்.
பர்மாவின் வடபகுதியில் வாழும் கச்சின்(முயஉhin) இனக் குழுவினர் 1961ல் இருந்து சுயாட்சி அரசினை அமைப்பதற்காக வர்மிய அரச படைகளோடு போராடி வருகின்றனர். கச்சின் சுதந்திர இராணுவமானது (முயஉhin ஐனெநிநனெநnஉந யூசஅல) 1994ல் சமாதான உடண்படிக்கையினை செய்துகொண்டு நீண்ட மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆயினும் இலாபகரமான சக்தி உற்பத்தி பகுதி ஒன்றினை கைப்பற்றும் நோக்கில் பர்மிய இராணுவம் 2011ல் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து யூத்த நிறுத்தம் முடிவூக்குக் கொண்டுவரப்பட்டது.
தற்போதைய பர்மாவின் கயா (முயலயா) மாநிலத்தில் கரென்னி (முயசநnni ) இராணுவம் கரென்னி (முயசநnni) இனத்தின் சுயாட்சிக்காக போராடி வருகின்றனர் இயற்கை வளங்களின் சுரண்டல்இ விவசாய உற்பத்திகளின் கட்டாய விற்பனைஇ கட்டாய சேவைக்கமர்த்துதல்இ கட்டாய இடப்பெயர்வூஇ கிராமங்களுக்கு தீவைத்தல்இ சூறையாடுதல்இசட்டவிரோத கைதுகள்இ சித்திரவதைகள் போன்றன இங்குள்ள மக்களுக்கு பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.
அவ்வாறே கயின் (முயலin) மாநிலத்தில் வாழும் கரின் (முயசநn) மக்களும் 1949ல் இருந்து போராடி வருகின்றனர். குறிப்பாக கரின் இன கிறிஸ்தவர்களே இங்கு சுயாட்சி அரசாங்கத்தை அமைக்கப் போராடி வருகின்றனர். ஆயினும் 1976ல் இருந்து இவர்கள் சமஷ்டி முறையைத் தமக்கான தீர்வூக் கோரிக்கையாக முன்வைக்கின்றனர்.
பர்மாவினது பெரிய மாநிலமான ஷான் (ளுhn) பொறுத்தவரையில் அங்கு வாழும் ஷான் இனத்தவர்கள் தமது சுயாட்சிக்காக 1960களின் ஆரம்பத்திலிருந்து போராடி வருகின்றனர். இங்கு மூன்று ஆயதக் குழுக்கள் போராடி வருகின்றன.
பர்மாவில் இன்றுவரை முக்கிய பிரச்சினையாக இருந்து வருவது ரகின் (சுயமாiநெ) மாநிலத்தில் வாழும் ரோகின்யா (சுழாபைலய) முஸ்லிம்களின் பிரச்சினையே. பர்மாவானது சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே முஸ்லிம் தலைவர்கள் அராகன் (யூசயமயn) பகுதியில் (தற்போது சுயமாiநெ என அழைக்கப்படுகிறது) உள்ள மயூ+ (ஆயலர) எனும் எல்லைக் கிராமத்தினை கிழக்கு பாக்கிஸ்தானோடு (தற்போது பங்களாதேஷ்) இணைத்தல் எனும் கோரிக்கையை முன்வைத்தே ஆயூதக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர். இக்கோரிக்கைகள் அரசால் நிராகரிக்கப்பட்டது. 1949ல் இருந்து முழு அராகன் பகுதிக்கும் உரித்துக் கோருகின்றனர். ஆயினும் பர்மிய அரசாங்கம் இவர்களை வெவ்வேறு காலப்பகுதியில் பர்மாவூக்கு வந்து குடியேறியவர்களாகவே கருதி இவர்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துவருகிறது. 1978ல் நீ வின் (நே றுin) ஆட்சியின் போது இவ்வினத்தோரின் சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த ழுpநசயவழைn முiபெ னுசயபழn நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆயினும் மனிதவூரிமை அமைப்புகள் பல இதனையோர் இனவழிப்பு நடவடிக்கையாகவே சுட்டிக்காட்டியது. 
இவ்வாறாக பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்த கலகம் 2012ல் மீண்டும் எழுர்ச்சியூற்றது. இக்கலகம் ஆரம்பமாவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே பல ரோகின்யா (சுழாiபெலய) முஸ்லிம் குழுக்கள் பங்களாதேஷில் கலந்துரையாடல்களை மேற்கொண்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆயினும் தனிப்பட்ட பிரச்சியையொன்றை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் 2012ல் ஆரம்பமாயின.
மேற்படியான மோதல்களினை பர்மாவில் ஏற்பட்ட பிரதான இன மோதல்களாக  அடையாளப்படுத்தலாம். இனி மோதல் தொடர்பான கோட்பாடுகளுடன் பர்மிய மோதல் அம்சங்கள் எங்ஙூனம் தொடர்புபடுகிறது எனப் பார்க்கலாம்.
மோதல் ஒன்றின் பின்புலத்தில் பிரதானமான மூன்று மூலக்கூறுகள் தொழிற்படும். மோதல் சூழமைவூஇ மோதல் உளப்பாங்குஇ மோதல் நடத்தை என்பனவே அவையாகும் என கல்டூங்இ மிச்சல் போன்றௌர் கூறுகின்றனர். இங்கு மோதல் சூழமைவூ என்பது ஒரே நேரத்தில் அடையப்பட முடியாத வளங்கள்இ விழுமியங்கள்இ உறவூகள் போன்றவற்றினைக் குறிக்கிறது. பர்மாவைப் பொறுத்தவறையில் நிலம் என்ற வளத்துக்கான ஓர் போராட்டமாகவே அதனை அடையாளப்படுத்த வேண்டியூள்ளது. அத்துடன் பர்மாவின் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள போராளிகள் பச்சை மாணிக்கம்இ முத்துஇ தேக்கு மர ஏற்றுமதி போன்றவற்றின் சட்டவிரோத வர்த்தகத்தின் மூலமாக நன்மை பெறுகின்றனர். இதனை முடக்குவதும் அரச தரப்பினரின் ஓர் நோக்கமாகும். மேலும் 2011ல் கச்சின் இராணுவத்திடமிருந்த சக்தி உற்பத்தி பகுதி ஒன்றினை கைப்பற்றும் நோக்கில் அரச இராணுவம் நடவடிக்கையினை மேற்கொண்டமையூம் இங்கு குறிப்பிடத்தக்கது.
மத நம்பிக்கைகள் கோட்பாடுகளும் விழுமியங்களை உருவாக்குகின்றன. ஒரு தரப்பு தமது விழுமியங்களை மற்றைய தரப்பினர் மீது திணிக்க முற்படும் போதும் அல்லது மற்றய தரப்பின் விழுமியங்களுக்கு உரிய இடம் வழங்காத போதும் மோதல்கள் வெடிப்பதற்கான சாத்தியங்கள் உண்டு. வர்மாவில் பௌத்தத்தை அரச மதமாக அங்கிகரித்ததன் மூலமாக கிறிஸ்தவ மததத்திற்குரிய அங்கிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக கரின் (முயசநn) இன கிறிஸ்தவ மக்களும் இஸ்லாமிய மத விழுமியங்களைப்பாதுகாத்துக் கொள்வதற்காக ரகின் (சுயமாiநெ) மாநிலத்தில் வாழும் ரோகின்யா (சுழாiபெலய) முஸ்லிம் மக்களும் போராடி வருகின்றனர்
எதிர்த்தரப்பு பற்றிய அச்சம்இ சந்தேகம்இ வெறுப்புப் போன்றன மோதல் உளப்பாங்கில் முக்கியம் பெறுகின்றன. பர்மாவில் சிறுபான்மையினத்தினரிடையே (இனஇ மத) தம் இருப்பு தொடர்பில் பெரும்பான்மை பர்மர்கள் மீது நம்பிக்கையின்மையூம் சிறுபான்மையினர் தேச ஒருமைப்பாட்டுக்குகுந்தகம் ஏற்படுத்துவர் என்ற பெரும்பான்மையினரின் சிறுபான்மையினர் மீதான நம்பிக்கையின்மையூம் பர்மிய மோதலின் பின்னணியில் காணப்படுகிறது. ரோகின்யா (சுழாiபெலய) முஸ்லிம்கள் ரகின் (சுயமாiநெ) மாநிலத்தை (முன்னர் அராகன் என அறியப்பட்டது) கிழக்கு பாகிஸ்தானோடு இணைப்பதற்காக போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதோர் விடயமாகும். இவற்றை விட ஒரு தரப்பின் மீதான மற்றைய தரப்பின் வெறுப்புணர்வூம் மோதலின் பின்னிலையில் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மோதல் சூழமைவூ ஒன்றில் மோதல் தரப்பினர் தம் இலக்கை அடைந்து கொள்வதற்காக மேற்கொள்ளும் அனைத்து விடயங்களும் மோதல் நடத்தைகளாக கொள்ளப்பட வேண்டும். இவ் மோதல் நடத்தைகள் யாவூம் தீவிரமான நடத்தைகளாக கொள்ளப்பட வேண்டும் என்பதில்லை. வாதப் பிரதிவாதங்கள்இ பயமுறுத்தல்கள்இவாக்குறுதிகள் போன்றனவூம் மோதல் நடத்தைகளே. பர்மிய மோதல்களில் ஆயூதப் போராட்டம் போன்ற சற்றுத் தீவிரமான நடவடிக்கைகளையூம் எதிர்த்தரப்பினர் ஒன்றாக இணைந்து பேச்சுவார்த்தை நடத்துதல்இ அரசாங்கத்துக்க எச்சரிக்கை விடுத்தல் போன்ற சில தீவிரமற்ற நடத்தைகளையூம் காணமுடியூம். சான்றாக 2012ல் ரோகின்யா முஸ்லிம்களுக்கு எதிரான கலகம் ஏற்படுவதற்கு முன்னர் முஸ்லிம் இயக்கத் தலைவர்கள் பலர் பங்களாதேஷில் சந்தித்துப் பேசியிருந்தனர்.
மோதல் ஒன்றின் பின்னணியில் செயற்படும் காரணிகள் எவை என்று விளக்கும் பல்வேறு போட்பாடுகள் காணப்படுகின்றன. அதிகாரக்கட்டமைப்புக் கோட்பாடுஇ சமூக உறவூக் கோட்பாடுஇ ஒவ்வா நிலைக் கோட்பாடுஇ மனிதத் தேவைக் கோட்பாடுஇ அடையாளக் கோட்பாடுஇ கலாசாரங்களுக்கு இடையேயான தவறான தொடர்பாடல் கோட்பாடுஇ மோதல் நிலை மாற்றக் கோட்பாடு போன்றன அவற்றுள் சிலவாகும். ஆயினும் குறித்த ஒரு மோதலின் பின்னணியில் ஒரு காரணி மட்டுமே தொழிற்படுகிறது என குறிப்பிட்டுக் கூறுவது கடினமானதாகும்.ஆயினும் பர்மிய மோதல்கலோடு அதிகாரக் கட்டமைப்புக் கோட்பாடுஇ அடையாளக் கோட்பாடுஇ கலாசாரங்களுக்கு இடையேயான தவறான புரிந்துணர்வூக் கோட்பாடு போன்றவற்றினைத் தொடர்புபடுத்தலாம்.
சமூகத்தில் அதிகாரம் செலுத்துவோர்இ அதிகாரத்திற்கு உற்படுவோர்எனும் இரு தரப்பினர் காணப்படும் போது இரு தரப்பினரிடையேயூம் மோதல்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது. எனவே சமூகத்தின் அதிகாரக் கட்டமைப்பே மோதலுக்கு காரணம் எனக் கூறும் இக்கோட்பாடே மோதல் தொடர்பான அதிகாரக் கட்டமைப்புக் கோட்பாடாகும்இ ஆப்ரஹாம்  (யூடிசயாயஅ) போன்றௌர் இக்கோட்பாட்டினை வலியூறுத்துவோராகக் காணப்படுகின்றனர். பர்மாவைப் பொறுத்தவரையில் சுதந்திரத்துக்குப் பின்னர் வர்மர்களே தொடர்ந்தும் அதிகாரம் செலுத்துவோராக இருந்ததுடன் இதனால் ஏனைய சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டனர். எனவேதான் சிறுபான்மையினர் தம்மைப் பாதுகாக்க அதிகாரம் செலுத்துவோருக்கு எதிராக போராடத் தொடங்கினர்.
பர்மாவில் சிறுபான்மையினர் தமது மதஇ இன அடையாளங்களைப் பாதுகாக்கும் பொருட்டே தொடர்ந்தும் அரசுடன் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். எனவே மதம்இ இனம்இ மொழி போன்ற அடிப்படையான அடையாளங்களை அங்கிகரிக்கத் தவறுகையில் இனமோதல்கள் ஏற்படும் என்பதே அடையாளக் கோட்பாட்டினை வலியூறுத்தும் பிஷர் (குiளாநச) போன்றௌரின் கருத்தாகும்.
இவை தவிர எந்தவொரு இன மோதலின் பின்னணியிலும் இனப்பாகுபாடுஇ இன இருப்புபற்றிய அச்சம் போன்றன தொழிற்படுவதைக் காணலாம். பர்மா சுதந்திரமடைந்தது முதற்கொண்டு அதிகாரம் செலுத்தி வந்த பெரும்பான்மையினர் சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடான முறையில் மேற்கொண்ட நடவடிக்கைகளும் மோதலைத் தூண்டுவதில் முக்கிய பங்காற்றியிருந்தன. அதே வேளை இன இருப்பு பற்றிய அச்சம் சிறுபான்மை இனத்தவர் மத்தியிலும் பெரும்பான்மை இனத்தவர் மத்தியிலும் பரவலாகக் காணப்படுகிறது. ரகின் (சுயமாiநெ) மாநிலத்தைப் பொறுத்தவரையில் முஸ்லிம்களின் குடியேற்றம் பௌத்தர்களின் இருப்புக்கு அச்சுறுத்தல் என பௌத்தர்கள் கருதும் அதே வேளை பௌத்தர்களால் தமது இன இருப்பு பாதிக்கப் படும் என முஸ்லிம்கள் கருதுகின்றனர். இதனை நிரூபிக்கும் வகையிலேயே பர்மிய இராணுவத்தால் ழுpநசயவழைn முiபெ னுசயபழn எனும் படை நடவடிக்கையூம் அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
மோதல் ஒன்றினது வரலாற்றினை ஆராய்கையில் அதன் விருத்திக்கட்டங்களை ஆராய்வதும் முக்கியமானதாகும். மோதல் ஒன்றின் வளர்ச்சிக் கட்டங்கள் எல்லா மோதல்களுக்கும் ஒரே மாதிரியானதாக இல்லாது போனாலும் பிஷர்இ மிச்சல் போன்றேர் மோதல் செயன்முறையின் வளர்ச்சிக் கட்டங்களாக பின்வருவனவற்றை குறிப்பிடுகின்றனர்.









அந்தவகையில் பர்மாவின் அனைத்து மோதல்களும் தீர்வூக்கு முந்திய அனைத்து நிலைகளையூம் அடைந்துள்ளன. அத்துடன் பேச்சுவார்த்தைக் காலத்தில் தீவிரம் குன்றிய நிலையிலிருந்து தீவிரம் மிக்க நிலைக்கும் சென்றுள்ளன.
மோதல் ஒன்றிற்கு தீர்வினைக் காண்பதில் பேச்சுவார்த்தைகளின் வகிபாகம் முக்கியமானதாகிறது. அந்த வகையில் பர்மாவில் பல்வேறு பேச்சுவார்த்தைகள் அரச தரப்புக்கும் சிறுபான்மையினரின் விடுதலை இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்றுள்ளன. குறிப்பாக 2012ல் கரின் (முயசநn) ஷான் (ளுhn) மாநிலங்களின் விடுதலை இராணுவத்தினருடன் யூத்த நிறுத்த ஒப்பந்தத்தினை அரசாங்கம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. ஆயினும் கடந்தகால அனுபவங்களின் படி இருதரப்பும் ஒப்பந்த நிபந்தனைகளை உரியமுறைபில் அவை கடைப்பிடிக்காததால் யூத்த நிறுத்தம் தோல்வியடைந்த வரலாறுகளே அதிகம்.

பர்மாஇ இராணுவ ஆட்சியின் போது அதிகளவில் வெளிநாடுகளுடன் தொடர்புகளை வைத்திராத போதும் பர்மிய மோதல்களில் பல்வேறு நாடுகளுக்கும் பங்குண்டு. குறிப்பாக கரின் (முயசநn) இராணுவத்தினருக்கு பிரித்தானியாவூம் ரோகின்யா முஸ்லிம்களுக்கு பங்களாதேஷ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளும் உதவிவருகின்றன. அவ்வாறே கச்சின் (முயஉhin) இராணுவம் சீனாவிடம் இருந்து உதவிகளைப் பெற்றுவரும் அதே வேளை தாய்லாந்தும் போராளிக் குழுக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.
இவ்வாறாக பர்மாவில் இனஇ மத மோதல்கள் இடம் பெறுகின்ற போதிலும் அவற்றை வெறுமனே தீவிரவாதம் என்றௌ கலகம் என்றௌ கூறிவிட முடியாது. காரணம் பர்மாவில் வாழும் மக்கள் தம் அரசியல் உரிமைகளுக்காகவே போராடிவருகின்றனர். இவற்றை முறையாக முகாமை செய்வதற்கானஇ தீர்த்து வைப்பதற்கான முயற்சிகள் கடந்த காலங்களில் மிக அரிதாகவே இடம்பெற்றன. இந்நிலைக்கு அங்கு நெடுநாளாக தொடர்ந்த இராணுவ ஆட்சியூம்இ பர்மா நீண்ட காலமாக கடைப்பிடித்து வந்த வெளிநாட்டுக் கொள்கைகளுமே முக்கிய காரணங்களாகும். எவ்வாறெனினும் தற்போது அங்கு ஏற்பட்டுள்ள ஜனநாயகத்தை நோக்கிய திருப்பங்கள் பர்மாவின் மோதல்களுக்கு சுமுகமான தீர்வினைப் பெற்றுத் தரும் என எதிர்பார்க்கலாம்.
2013.03.03

















Comments

Popular posts from this blog

பிரித்தானிய பாராளுமன்றம்

மனித உரிமைகள்

ஐரோப்பிய தேசிய அரசுகளின் தோற்றம் - வரலாறு