இலங்கையின் சிவில் சேவையில் ஏற்பட்ட மாற்றங்கள் சிவில் சேவையினது ஆரம்பம் பற்றி ஒரு தௌpவான வறையறையை மேற்கொள்ள முடியாது. ஆயினும் 16ம் நுhற்றாண்டிலிருந்தெ மானிய முறையை மையமாகக் கொண்ட நிர்வாகத்தை மையப்படுத்தி சிவில் சேவையானது ஆரம்பமானது எனக் கூறப்படுகிறது. ஆரம்ப காலத்தில் சிவில் சேவையினது முக்கியத்துவம் உணரப்படா விட்டாலும் பின்னாளில் அரசினது பணிகள் விரிவடைந்த போது சிவில் சேவையின் முக்கியத்துவம் அதிகரித்தது. இதனாலேயே பொது நிர்வாகவியலின் தந்தையான “வூ+ட்டோ வில்சன்” என்பவர் “பொதுத்துறை நிர்வாகம் அரசாங்கத்தின் தௌpவான பகுதி” எனவூம் “அரசாங்கம் தொழிற்படும் போது நிர்வாகம் தொழிற்படும்” எனவூம் “நிர்வாகம் தொழிற்படும் போது அரசாங்கம் தொழிற்படும்” எனவூம் கூறுகிறார். அந்தவகையில் இலங்கையில் மன்னராட்சிக் காலம் தொட்டே மானிய முறையை அடிப்படையாகக் கொண்ட இராசகாரிய முறை நிர்வாகத்தில் பின்பற்றப்பட்டதாக வரலாற்று நுhல்களில் கூறப்படுகிறது. “கமிக” என அழைக்கப்பட்ட கிராமியத் தலைவன் புராதன காலத்தில் காணப்பட்டது இதற்கு தக்க சான்றாகும். இத்தகைய இரா...
பிரித்தானிய பாராளுமன்றம் இன்றைய கால கட்டத்தில் ஒரு நாட்டுக்கு தேவையான சட்டத்தை இயற்றி நிர்வாகத்தை மேற்கொள்வதற்கு தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்து நாட்டை சிறப்பாக நிருவாகிப்பதற்கு நிருவாகத் துறைக்கு பக்கபலமாய் சட்டத்துறை காணப்படுகிறது . சட்டத்துறையினது வரலாறு நீண்டதாயினும் பிரதிநிதித்துவ சட்டத் துறையின் வரலாறு குறுகியதே . எவ்வாறாயினும் தற்போதுள்ள சட்ட மன்றங்கள் யாவற்றுடனும் ஒப்பிடும் போது பிரித்தானிய சட்ட மன்றம் நீண்ட வரலாற்றினை உடையது . தh ய் பாராளுமன்றம் என கூறக்கூடியளவுக்கு தற்போதுள்ள சட்டமன்றங்கள் யாவற்றுக்கும் முன்னோடியாய் விளங்குகிறது . பிரித்தானியாவில் முடியாட்சி நடைபெற்ற காலத்தில் மன்னனுக்கு ஆலோசனை கூறுவதற்கான ஒரு சபை காணப்பட்டது . இச்சபையில் குல மரபுக் குழுக்களின் முக்கியஸ்தர்கள் , புத்திசாலிகள் போன்றோர் காணப்பட்டனர் . மன்னன...
மனித உரிமைகள் எனும் விடயமானது இன்றைய நிலையில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றதொரு விடயமாக உள்ளது. பல்வேறு விழுமியங்களில் நம்பிக்கை கொண்டோரும் பல்வேறு சித்தாந்தங்களைக் கடைப்பிடிப்போரும் தமக்கேற்றாற் போல் மனித உரிமை விடயங்களை வடிவமைப்புச் செய்துள்ளனர். அதே வேளை மனித உரிமை என்பது சமூகத்தோடு இணைந்து வளர்ச்சியுற்று இன்றைய நிலையினை அடைந்துள்ளது. இன்றும் மனிதவுரிமைகள் எனும் விடயமானது சமூகத்துடன் இணைந்தே அசைவுற்றுக் கொண்டுள்ளது. இதனால் மனித உரிமை என்பதற்கு திட்டவட்டமான வரைவிலக்கணம் கூறுவது கடினமானதோர் விடயமாகவுள்ளது. இதன் காரணமாக அறிஞர்கள் மனித உரிமைகளுக்கு வேறுபட்ட வரைவிலக்கணத்தினை முன்வைக்கின்றனர். மனித உரிமை எனும் விடயத்தை விளக்க முற்படுகையில் மனிதன், உரிமை எனும் இரு விடயத்தினை விளங்கிக் கொள்வது அவசியமாகும். மனிதன் என்கின்ற பதமானது தேசியம், வாழிடம், பால், தேசம், இனம், நிறம், மதம், மொழி அல்லது இவை போன்ற வேறு நிலைகளைக் கடந்து இப் பூகோளத்தில் வாழும் அனைவரையும் குறிக்கிறது. மனிதர்கள் யாவரும் வேறுபாடு அற்றவர்கள் என்பதே இதன் உட்கிடக்கையாகும். ஆயினும் உரிமைகள் எனும் பதத்தினை இவ்வாறு இலகுவாக வரையறை...
Comments
Post a Comment